tamilnadu

img

உண்மையிலேயே குப்பைகள் கிடக்கும் பகுதிக்கு வர பிரதமர் மோடி தயாரா?

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா கேள்வி

புதுக்கோட்டை, அக்.13-  கேமரா வெளிச்சத்தைத் தாண்டி உண்மையிலேயே குப்பைகள் குவிந்துகிடக்கும் பகுதிகளுக்கு மோடி வரத் தயாரா எனக் கேள்வி எழுப்பி னார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலா ளர் எழுத்தாளர் ஆதவன் தீட் சண்யா. ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் கணினி தமிழ்ச்சங்கம் சார்பில் நடை பெற்ற இணையப் பயிற்சி முகாமில் அவர் பேசியது: இன்றைக்கு சமூக ஊட கங்களை பல்வேறு தரப்பி னர் பல்வேறு செயல்பாடு களுக்குப் பயன்படுத்தி வரு கின்றனர். குறிப்பாக மத்தி யில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி 32 லட்சம் பேரை இத் துறையில் இறக்கி விட்டுள் ளது. இதர அரசியல் கட்சி களும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றன. என்றா லும் அன்றாம் நாட்டில் எந்தப் பொருள் குறித்து விவாதிக்க வேண்டுமென இவர்கள்தான் தீர்மானிக்கின்றனர். அந்த அளவுக்கு ட்ரெண்டை உரு வாக்குகிறார்கள். நாட்டி லுள்ள 130 மக்களின் மன நிலையை இவர்கள்தான் தக வமைக்கிறார்கள். 

பிரதமர் மோடி, சீன ஜனா திபதி ஜீ ஜின் பிங் சந்திப்பை விட மோடி குப்பை பொறுக் கிய செய்திதான் பிரதான மாகப் பேசப்படுகிறது. அவ்வ ளவு சுத்தமான குப்பைகள் வேறு எங்கும் கிடைக்காது என்கிற விதத்தில் அவரின் குப்பை சேகரிக்கும் பணி இருந்தது. கேமரா வெளிச்சத் தைத் தாண்டி உண்மையி லேயே குப்பைகள் குவிந்து கிடக்கும் பகுதிக்கு அவர் வரத் தயாரா? நாட்டில் வரு டத்திற்கு 22 ஆயிரம் பேர் மலக்குழியில் இறக்கின்ற னர். வருடத்திற்கு 65 ஆயிரம் டன் குப்பைகளை நாம் உரு வாக்குகிறோம். பல லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நம்மால் ராக்கெட் அனுப்ப முடிகிறது. ஒருசில அடி ஆழத்தில் இருக்கும் மலத்தை அப்புறப்படுத்துவதற்கு நம் மால் எந்திரம் கண்டுபிடிக்க முடியவில்லை.

அன்லிமிடெட் வாய்ஸ், அன்லிமிடெட் டேட்டா மூலம் எந்த நேரமும் செல்போனி லேயே இளைஞர்கள் மூழ்கிக்கிடக்கின்றனர். இத னால் தங்கள் அருகாமை யில் இருக்கும் உயிர்ப்பான மனிதர்களோடு உறவாடு வது தடைபட்டு இருக்கிறது. ஒருசில நிமிடங்கள் டவர் இல்லையென்றால் உலகமே இருண்டுவிட்டதாக கவலைப் படுகிறோம். நமது சொந்த நாட்டுக்குள்ளே காஷ்மீர் மக்கள் கடந்த இரண்டு மாதங் களாக தொலைத் தொடர்பு உள்ளிட்ட சமூக ஊடகங்க ளில் இருந்து முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டு இருக்கின்ற னர். இதுகுறித்து நாம் கவ லைப்பட்டு இருக்கிறோமா? விவாதித்து இருக்கிறோமா. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இருக்கிறோமா?  நாட்டில் 58 சதவிகிதம் பேர் ஏதாவது ஒருவகையில் இணையத்தைப் பயன் படுத்துகிறார்கள். இது மேலும் ஜனநாயகப்படுத் தப்பட வேண்டும். இணை யத்தை ஆக்கப்பூர்வமான வகையில் பயன்படுத்துவ தற்கும், முன்னெடுத்துச் செல்வதற்கும் நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆதவன் தீட் சண்யா பேசினார்.  

(ந.நி.)

;